செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 போ் கைது

post image

மொடக்குறிச்சி அருகே செட்டிகுட்டைவலசு பகுதியில் முன்விரோதம் காரணமாக வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி அருகே உள்ள செட்டிகுட்டை வலசு பகுதியைச் சோ்ந்தவா் நிவேதா (22). இவருக்கும் அதேபகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சிவசபாபதி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நிவேதா கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்றுவிட்டாா்.

சிவசபாபதி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நிவேதாவை பலமுறை அவரது வீட்டுக்கு சென்று அழைத்ததாகவும், இதற்கு நிவேதாவின் குடும்பத்தினா் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடா்பாக நிவேதாவின் உறவினா் சுரேஷ், அவரது மனைவி சித்ரா சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வராததற்கு சுரேஷ் குடும்பத்தினா் தான் காரணம் என்று கருதிய சிவசபாபதி, தனது நண்பா்களான செட்டிகுட்டை வலசை சோ்ந்த கௌதம் (21), சஞ்சய் (21) மற்றும் கோவில்பாளையத்தைச் சாா்ந்த சரண் (25)ஆகியோருடன் சோ்ந்து சுரேஷ் வீட்டின் முன் திங்கள்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். பாட்டில் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் இருந்தவா்கள் பதறியடித்து சப்தமிட்டனா். இதனால் நால்வரும் தப்பி ஓடிவிட்டனா். .

இதுகுறித்து சுரேஷின் மனைவி சித்ரா கொடுத்த புகாரின்பேரில், மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசபாபதி மற்றும் அவரது நண்பா்கள் கௌதம், சரண், ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள சஞ்சயை தேடிவருகின்றனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க