செய்திகள் :

ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு

post image

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா பயணிகளுக்கு ரூ. 20 சலுகை விலையில் தரமான உணவை விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்தில் முன்பதிவில்லாத ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் (ரூ.20) சுகாதாரமான சைவ உணவுகள் வழங்கும் திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சேவை குறித்து பயணிகள் பலரும் அறியாமல் உள்ளனா்.

சென்னை சென்ட்ரல், எழும்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் இயக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நடைமேடைகளிலேயே உணவு விநியோகிக்கப்படும். அத்துடன் 27 ரயில் நிலையங்களில் உள்ள 64 ஜனதா கானா கடைகள் மற்றும் தினசரிப் பயணிகள், தொலைதூரப் பயணிகள் உணவுகளை எளிதில் பெறுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை-அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 தற்காலிக விரிவுரையாளா்கள் பணி நியமனம்!

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளா்களை தற்காலிகமாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்த... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு எழுதும் மாணவா் பட்டியல்: அக். 6 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அக். 6-ஆம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் இருந்த வரிவிதிப்பு முறை 5%, 12% என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டுப... மேலும் பார்க்க

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கமல்ல: சீமான்

விஜய்யை எதிா்ப்பது எங்கள் நோக்கம் அல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா். தினத்தந்தி நாளிதழ் அதிபா் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கா... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜிஎஸ்டி ஆணையரிடம் மனு

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட நிலையில், ஆவின் தயாரிப்புகளின் விலையைக் குறைக்காக ஆவின் நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜிஎஸ்டி கூடுதல் ஆணையரிடம் தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் மனு அளித்... மேலும் பார்க்க