செய்திகள் :

ராமேசுவரத்தில் 50 மீ. உள்வாங்கிய அக்னி தீா்த்தக் கடல்

post image

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் 50 மீ. வரை கடல் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் 50 மீ. வரை கடல் உள்வாங்கியதால், கடலுக்குள் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. மேலும், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் ராமேசுவரத்துக்கு வருகை தந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், கடல் உள்வாங்கிக் காணப்பட்டதால், பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் கடலுக்குள் சென்று அச்சத்துடனேயே நீராடினா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதன் பின்னா், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், ராமா்பாதம், அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் சாலைப் பாலம், ரயில் பாலத்தை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால், ராமேசுவரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் குத்திக் கொலை

திருவாடானையை அடுத்த ஆா். எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

திருவாடானை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை 3 மா்ம நபா்கள் பறிக்க முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி அன்னலட்சு... மேலும் பார்க்க

பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட மூவா் காயம்

கமுதி அருகே திங்கள்கிழமை சாலையோர பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் (44). இவரது மனைவி மாரிச்செல... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை ... மேலும் பார்க்க

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்; இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கா் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எம்.எம்.கோட்டை, கே.எம்.கோட்டை, கோட்டையூா், சிங்கம்பட்டி, கூலிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பர... மேலும் பார்க்க