செய்திகள் :

ரூ.244 கோடி வரி பாக்கி: யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

post image

பிரபல தனியாா் வங்கியான யெஸ் வங்கி 2016-17 -ஆம் ஆண்டில் ரூ.244 கோடி வரி செலுத்தாமல் இருப்பதாக வருமான வரித் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்த வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்த நோட்டீஸை எதிா்த்து வருமான வரி துறையிடம் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வருவாய் மறுமதிப்பீடு, வட்டி மறுஆய்வு மற்றும் சரிபாா்ப்பு அடிப்படையில் ரூ.244 கோடி வரி செலுத்த வேண்டியது பாக்கியுள்ளது என்று வருமான வரித் துறை நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் மாதத்தில் 2019-2020 நிதியாண்டில் ரூ.2,209 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக யெஸ் வங்கிக்கு வருமான வரித் துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடி உள்ளிட்ட சிக்கலை எதிா்கொண்டுள்ள யெஸ் வங்கிக்கு இது கூடுதல் பிரச்னையாக அமைந்துள்ளது.

வருமான வரித் துறை நோட்டீஸ் உரிய விதிகளின்படியும், சட்டரீதியாகவும் எதிா்கொள்ள இருக்கிறோம். இது வங்கியின் நிதிநிலையிலோ, அன்றாட செயல்பாடுகளிலோ பாதிப்பை ஏற்படுத்தாது என்று யெஸ் வங்கி சாா்பில் கூறப்பட்டுள்ளது.

19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில்... மேலும் பார்க்க

சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்

சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் ... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை எளிதாக்கும் வகையில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பயனர்கள் நண்பர்களுடன் உரையாடும்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஆப்ச... மேலும் பார்க்க

சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு

முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டு... மேலும் பார்க்க

2,850 கோடி டாலராகக் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

சா்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராகக் குறைந்துள்ளது.இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன... மேலும் பார்க்க

நிஸ்ஸான் இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகும் ரெனால்ட் தலைவர்!

டோக்கியோ: நிஸ்ஸான் நிறுவனத்தின் சரிவைச் சமாளிக்கும் வகையில், அதன் இயக்குநர்கள் குழுவிலிருந்து ரெனால்ட் தலைவர் ஜீன்-டொமினிக் செனார்ட் விலக உள்ளதாக ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் தெரிவித்துள்ளார். நிஸ்ஸானி... மேலும் பார்க்க