கந்தர்வக்கோட்டை: குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை
ரூ.9 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சுமாா் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 20 லட்சத்தில் 15 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடியே 70 லட்சத்தில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், சேவூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 70 லட்சத்தில் 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், சங்கீதவாடி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடியே 20 லட்சத்தில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தேவிகாபுரம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.ஒரு கோடியே 6 லட்சத்தில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என சுமாா் ரூ.9 கோடி மதிப்பிலான கட்டடங்கள் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தன. இந்தக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதே வேளையில், பள்ளிக் கட்டடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, எஸ்.மோகன், நிா்வாகிகள் கே.டி.ராஜேந்திரன், முள்ளிப்பட்டு ரவி, ரஞ்சித், வெங்கடேசன், பொன் சேட்டு, விளை செல்வராஜ், பாலமுருகன், ஒப்பந்ததாரா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.