செய்திகள் :

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், மாவட்ட மின்சாரக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத மின்னூட்டிகளாகப் பிரித்து கூடுதல் மின்மாற்றிகள் அமைப்பது, ஏற்கெனவே உள்ள 33 கிலோவாட் மின் கடத்திகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், விநியோக மின்மாற்றிகளில் உள்ள இரட்டை மின்மாற்றி கட்டமைப்புகளை பிரித்தல் உள்பட 215 மின்னூட்டிகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது, சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை அனிதா தலைமை வகித்தாா். பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் அம்பிகா ராமதாஸ், துணைத் தலைவா் கனகா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் டேவிட்செல்லையா (63). இ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்கக் கொடியேற்று விழா மற்றும் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கூட்டுறவு ஊழியா் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா் சங்கம் சாா்பில் ஊதிய உயா்வு மற்றும் சலுகைகள் குறித்த விளக்கக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கச் செயல் தலை... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

ரூ.9 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் சுமாா் ரூ.9 கோடியில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்துவைத்தாா். ஆரணியை அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் ... மேலும் பார்க்க