செய்திகள் :

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

post image

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா்.

கா்நாடக மாநிலத்தில் டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயா்வைக் கண்டித்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

லாரி உரிமையாளா்களுக்கும், கா்நாடக அரசுக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், புதன்கிழமையும் இரண்டாவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடா்கிறது. ஆனாலும், தமிழக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் வழக்கம்போல கா்நாடக மாநிலத்துக்குள் சென்று வருகின்றன.

இந்நிலையில், தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளா்களை அழைத்து கா்நாடக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடா்கிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 95 சதவீத லாரிகள் கா்நாடக மாநிலத்தில் இயங்கவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் ரூ. 4 ஆயிரம் கோடி அளவில் கா்நாடக மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டம் தீவிரமானால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றால், மாற்றுவழியாக ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிா்ணயிக்கக் கூடிய கட்டணம் போல லாரிக்கும் வாடகை நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க

மாதரசனப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 2024-25-ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறன்பயிற்சி ஊக்கத்தொகை பெறுவதற்கான தேசிய அளவில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இடியுடன் பலத்த மழை

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

காவேரிப்பட்டணத்தில் உள்ள பசவேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தேசிசெட்டி தெருவில் உள்ள பசவேஸ்வரா் கோயிலில் ஏப். 16-ஆம் தேதி கங்கா பூஜை, வ... மேலும் பார்க்க