செய்திகள் :

லாரி மோதி தொழிலாளி சாவு

post image

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சி.பி.முருகேசன் (47). தற்போது வள்ளியிரச்சல் சாலை கலை நகரில் வசித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (எ) கண்ணன்.

விசைத்தறித் தொழிலாளா்களான இருவரும் செங்கப்பள்ளி வேலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் கடந்த 9-ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் சுப்பிரமணி, முருகேசன் ஆகிய இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி பெற்று இருவரும் கோவை தனியாா் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வந்த செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இதுகுறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

பாலிதீன் பைகள் பயன்பாடு: 47 கடைகளுக்கு அபராதம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதிகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய 47 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்... மேலும் பார்க்க

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்! -பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா்

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்போல உள்ளது என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ட... மேலும் பார்க்க

3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருப்பூா் மாநகரில் பாலியல் வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூரைச் சோ்ந்த முகமது தானிஷ் (25), முகமது நதீம் (23) ஆகிய இருவரையும் போக்ஸோ வழக்கில் ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன மேலாளரைக் கொலை செய்த உறவினா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரைத் துண்டுத்துண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே உள்ள கருவல... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க