செய்திகள் :

லாலு உள்பட 77 பேருக்குத் தில்லி நீதிமன்றம் சம்மன்!

post image

ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 77 பேருக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை, லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஜூன் 7 அன்று, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) லாலு பிரசாத் யாதவ் மற்றும் 77 பேர் மீது வேலைக்கான நிலம் கையகப்படுத்தல் வழக்கில் ஒரு உறுதியான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்தாண்டு லாலு பிரசாத், மகன்கள் உள்பட 9 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், இந்த வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிய லாலு பிரசாத் யாதவ் உள்பட 77 பேருக்கு தில்லி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கூடுதலாக தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி குற்றச்சாட்டுகள் உள்பட மூன்று குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி மார்ச் 11 ஆம் தேதி ஆஜராக சிறப்பு சிபிஐ நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார்.

மூன்று குற்றப்பத்திரிகைகள் மீதான விசாரணையும் கூட்டாக நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அனைத்து குற்றப்பத்திரிகைகளின் நகல்களையும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 77 பேருக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 30 பேர் பொது ஊழியர்கள் மற்றும் 38 வேட்பாளர்கள்.

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில், பிகா... மேலும் பார்க்க

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?

நாடு முழுவதும் குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும், தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அடையாளங்களை சரிபார்த்து முடித்திருக்க வேண்டும்.ரேஷன் பொருள்கள் வாங்கும் கடைகள... மேலும் பார்க்க

சிக்கன் சமைக்காத மனைவியைக் கொன்ற கணவன்!

ஒடிஸாவில் இரவு உணவுக்கு சிக்கன் சமைக்காததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை அடித்ததில் அவர் பலியானார். தேன்கனல் மாவட்டம் கோண்டியா காவல் நிலையத்துக்கு உள்பட்ட தானியானலி முண்டா சாஹி என்ற கிராமத்தில் ஜெனா ப... மேலும் பார்க்க

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை!

கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டன... மேலும் பார்க்க