செய்திகள் :

சிக்கன் சமைக்காத மனைவியைக் கொன்ற கணவன்!

post image

ஒடிஸாவில் இரவு உணவுக்கு சிக்கன் சமைக்காததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை அடித்ததில் அவர் பலியானார்.

தேன்கனல் மாவட்டம் கோண்டியா காவல் நிலையத்துக்கு உள்பட்ட தானியானலி முண்டா சாஹி என்ற கிராமத்தில் ஜெனா பிங்குவா (வயது 40), குனி பிங்குவா(35) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிக்க : ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்தாரா ஜெயலலிதா? எந்தப் படத்தில்?

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்தில் உள்ள கடையில் சிக்கன் வாங்கிய ஜெனா, தனது மனைவியுடன் கொடுத்து இரவு உணவுக்கு சமைத்து வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியே சென்று இரவு வீடு திரும்பியபோது, சிக்கன் சமைத்து வைக்காததால் ஆத்திரமடைந்து மனைவிவை பலமாக தாக்கியுள்ளார்.

இதில், தரையில் விழுந்த குனி, சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த இடத்தைவிட்டு ஜெனா தப்பிய நிலையில், திங்கள்கிழமை காலை குழந்தைகள் தங்களது தாய் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் தலைவர் நுபுர் சர்மா புனித நீராடினார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி ... மேலும் பார்க்க

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில், பிகா... மேலும் பார்க்க