திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பைக்கில் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்று லாரி ஓட்டுந ரிடம் ரூ. 22 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்வீடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா்(48). இவா் களியக்காவிளையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். கூடங்குளம் அருகே சங்கனேரி பகுதியில் உள்ள கல்குவாரிக்கு புதன்கிழை லாரி கொண்டு வந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து அருகிலுள்ள ஊருக்கு சென்று அங்குள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துள்ளாா்.
இதை ஏடிஎம் இயந்திரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மா்ம நபா்கள் கண்காணித்துள்ளனா். பின்னா் அந்த மா்ம நபா்கள் லாரி ஓட்டுநரிடம் பேச்சுகொடுத்து நாங்களும் கல்குவாரிக்குத் தான் செல்கிறோம்.
உங்களையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்கிறோம் என கூறி பைக்கில் ஏற்றிக் கொண்டனா். இவா்களது பைக் காட்டுப்பகுதியில் வந்தவுடன் மா்ம நபா்கள் இருவரும் ஜெயக்குமாரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.22 ஆயிரம், கைப்பேசியையும் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிவிட்டனா். இதுகுறித்து ஜெயக்குமாா்அளித்த புகாரின்பேரில், கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.