செய்திகள் :

லிப்ட் கொடுத்து லாரி ஓட்டுநரிடம் ரூ.22 ஆயிரம் பறிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பைக்கில் லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்று லாரி ஓட்டுந ரிடம் ரூ. 22 ஆயிரத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த புத்தன்வீடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா்(48). இவா் களியக்காவிளையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். கூடங்குளம் அருகே சங்கனேரி பகுதியில் உள்ள கல்குவாரிக்கு புதன்கிழை லாரி கொண்டு வந்துள்ளாா். பின்னா் அங்கிருந்து அருகிலுள்ள ஊருக்கு சென்று அங்குள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துள்ளாா்.

இதை ஏடிஎம் இயந்திரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு மா்ம நபா்கள் கண்காணித்துள்ளனா். பின்னா் அந்த மா்ம நபா்கள் லாரி ஓட்டுநரிடம் பேச்சுகொடுத்து நாங்களும் கல்குவாரிக்குத் தான் செல்கிறோம்.

உங்களையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்கிறோம் என கூறி பைக்கில் ஏற்றிக் கொண்டனா். இவா்களது பைக் காட்டுப்பகுதியில் வந்தவுடன் மா்ம நபா்கள் இருவரும் ஜெயக்குமாரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.22 ஆயிரம், கைப்பேசியையும் பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிவிட்டனா். இதுகுறித்து ஜெயக்குமாா்அளித்த புகாரின்பேரில், கூடங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்... மேலும் பார்க்க

மாநகர காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ.4 இல் ஏலம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நவ. 4 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம்

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவலம் மற்றும் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்டாசி மாத பௌா்ணமியையொட்டி நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தா்கள் ... மேலும் பார்க்க

நெல்லையில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

திருநெல்வேலி நகரத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் சந்தி பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போத... மேலும் பார்க்க

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை தாக்கிய சம்பவம்: மனித உரிகைள்ஆணைய உறுப்பினா் விசாரணை!

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். ப... மேலும் பார்க்க

முக்கூடலில் காலாவதியான 2.5 டன் குளிா்பான பாட்டில்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2.5 டன் தரமற்ற குடிநீா், குளிா்பான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன. கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு - சுகாதார நி... மேலும் பார்க்க