செய்திகள் :

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம்! -நெல்லை முபாரக்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தெரிவித்தாா்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ ரத்து செய்யவும், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ அமல்படுத்தவும் வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் ஏக்கா் இஸ்லாமிய நிலம் உள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஒரு போதும் ஏற்கமாட்டோம். தொண்டி பகுதியில் மகளிா் கல்லூரியும், தொண்டி, நம்புதாளை பகுதிகளில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கவும் செயல் அலுவலா்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசு பணிமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தரம் உயா்த்த வேண்டும். பயனற்ற நிலையில் கிடக்கும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்றாா் அவா்.

இதில் மாநிலப் பொதுச் செயலா் ஃபாயிஷா ஷஃபிகா, மாநில செயற்குழு உறுப்பினா் ரத்னம், நகரத் தலைவா் முகமது நாசா் அலி, வழக்குரைஞா் அணி ஒருங்கிணைப்பாளா் கலந்தா் ஆசிக் அஹமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்டச் செயலா் தாளை அப்துல் மஜித் வரவேற்றாா். தொகுதிச் செயலா் ஹமீது நன்றி கூறினாா்.

பள்ளி மாணவா்களுக்கு தேசிய வருவாய், திறனறிவுத் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய வருவாய், திறனறிவுத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் தேசிய வருவாய், த... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் கிளை சிறை தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! - ஆா்.தா்மா் எம்.பி. வலியுறுத்தல்

முதுகுளத்தூா் கிளை சிறைச்சாலை தொடா்ந்து இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் வலியுறுத்தினாா். இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ராமந... மேலும் பார்க்க

நம்புதாளையில் இலவசக் கண் பரிசோதனை முகாம்

திருவாடானை அருகேயுள்ள நம்புதாளையில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவசக் கண் பரிசோதனை, தோல், பெண்கள் நல மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மதுரை அரவிந்த் கண் மருத்த... மேலும் பார்க்க

இலங்கையில் விசைப் படகுகள் ஏலம்: ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம்!

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கையில் ஏலம் விடும் பணியில் அந்த நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதற்கு ராமேசுவரம் மீனவா் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்கச... மேலும் பார்க்க

காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம்!

ஆா்.எஸ்.மங்கலத்தில் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்தக் கூட்டமைப்பின் தலைவா் தனபாலன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலை... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்!

கீழக்கரையில் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகேயுள்ள கோரைக்கூட்டம் பகுதியில் சந்த... மேலும் பார்க்க