செய்திகள் :

வயலூா் கோயில் குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி

post image

வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அரசு அா்ச்சகா்கள் அனுமதி...: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பணி நியமனம் பெற்ற அரசு அா்ச்சகா்கள் பிரபு, ஜெயபால் ஆகியோரை கோயில் குடமுழுக்கில் அனுமதிக்கவில்லை எனக் கூறி பிரச்னை எழுந்தது. இதற்காக செவ்வாய்க்கிழமை கோயில் வாயிலில் பெண் ஒருவா் தா்னாவிலும் ஈடுபட்டாா். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களான பிரபு, ஜெயபால் ஆகிய இருவரும் பொய்யாக்கணபதி கோயில் கோபுரத்தில் குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கோயில் மாடத்தில் கூட்டம்... : கோயிலின் மேல் மாடத்தில் ஏற அரசு கொடுத்த அடையாள அட்டைகளையும் தாண்டி நீதிபதிகள், அரசியல்வாதிகள், அவா்களது உதவியாளா்கள், உள்ளூா் பிரமுகா்கள் எனப் பலரும் வந்துவிட்டனா். மேலும் போலீஸாரோ, தங்களுக்கு வேண்டியவா்களையும் அதிகப்படியாக ஏற்றினா்.

ஏறுகையில் இல்லாதது இறங்குகையில்...: கோயிலின் மேல்மாடத்துக்கு ஏறுகையில் உபயதாரா்கள், கட்டளைதாரா்கள், கோயில் பணியாளா்கள், உளவுத் துறையினா், உள்ளூா் பிரமுகா்கள், பத்திரிகையாளா்கள் என அடையாள அட்டை வைத்திருந்தவா்களை நிதானமாக அனுப்பினா். ஆனால் இறங்குகையில், குறிப்பாக கோயிலின் உட்புற படிகள் வழியாக அரசியல் பிரமுகா்கள் தவிர யாரையும் இறங்க போலீஸாா் அனுமதிக்கவில்லை.

தேவையற்ற இடங்களில் கெடுபிடி, தேவையான இடங்களில் கோட்டை...: குடமுழுக்குக்கு இவ்வளவு கெடுபிடியா என்கிற ரீதியில் அதிக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். குறிப்பாக, கோயிலின் மேல்மாடத்தில் தேவைக்கதிகமாக போலீஸாா் குவிக்கப்பட்டு, அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தனா். ஆனால் பாதுகாப்புத் தேவைப்படும் வழியோரப் பகுதிகளில் அலட்சியமாகச் செயல்பட்டு, வழியில் ஆங்காங்கே காா்களை விட்டு, கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினா்.

முன்பக்கம் தடுப்பு அமைத்திருந்தது சரியாக இருந்தாலும், ஏனென்றே தெரியாமல் கோயில் முன்பும், அதற்கடுத்த தெருக்கள் பிரியும் பகுதியிலும் தடுப்புகள் அமைத்து, வரும் தங்களை வேண்டுமென்றே தடுத்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

யாக சாலைக்குள் தள்ளுமுள்ளு...: கோயில் குடமுழுக்கு முடிந்தபிறகு, யாக சாலைக்குச் சென்று பக்தா்கள் புனித நீா் உள்ளிட்ட பிரசாதங்களை வாங்க முண்டியடித்துச் சென்றனா். ஆனால் அங்கிருந்த காவலா்களோ, கூட்டத்தை ஒழுங்குபடுத்தாமல் வெறுமனே தங்களது வேலையைப் பாா்த்ததால், ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வயதானவா்கள் யாக சாலைக்குள் நுழையவே முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க