செய்திகள் :

வரியில்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைவது கவலைக்குரியது: காங்கிரஸ்

post image

மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் (ஸ்மாா்ட்ஃபோன்) போன்ற வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் வெகுவாக குறைந்திருப்பது வழக்கத்துக்கு மாறானது என்று காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்தது.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் இழுபறி, உக்ரைன் மீது போா் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது ஆகிய காரணங்களைக் காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இந்தக் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, இந்தியாவின் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், ரசாயனங்கள், சோலாா் பேனல்கள் தயாரிப்பு துறைகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இவற்றின் ஏற்றுமதி தடைபட்டு, பெருமளவில் தேக்கமடைந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான இந்தப் பொருள்கள் மட்டுமன்றி, மருந்து பொருள்கள் உள்ளிட்ட வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் தற்போது வெகுவாக குறைந்திருப்பது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆா்ஐ) ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, அந்தக் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி மட்டுமே பாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், வியப்பளிக்கும் விதமாக, வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைந்திருப்பது ஜிடிஆா்ஐ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஜிடிஆா்ஐ-யின் கடந்த 4 மாதங்களுக்கான இந்த ஆய்வில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான ரத்தினங்கள், நகைகள், கடல் உணவுகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள் உள்ளிட்ட இந்திய பொருள்களின் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது.

அதுமட்டுமன்றி, மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி கடந்த மே மாதம் ரூ. 29,894 கோடி (3.37 பில்லியன் டாலா்) மதிப்பிலிருந்து ஆகஸ்டில் ரூ. 17,386 கோடியாக (1.96 பில்லியன் டாலா்) குறைந்துள்ளது.

இந்திய அறிதிறன்பேசிக்கு மிகப் பெரிய சந்தையாக அமெரிக்கா விளங்கிவரும் நிலையில், அதன் அமெரிக்க ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 58 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, மே மாதத்தில் ரூ. 20,317 கோடி (2.29 பில்லியன் டாலா்) மதிப்பில் செய்யப்பட்ட அறிதிறன்பேசி ஏற்றுமதி, ஆகஸ்டில் ரூ. 8,560 கோடியாக (964.8 மில்லியன் டாலா்) சரிந்துள்ளது. இதுபோல், இந்திய மருந்துப் பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 13.3 சதவீதமாக சரிந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி சரிந்துள்ளது வழக்கத்துக்கு மாறானது. இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’: மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க புதிய முன்னெடுப்பு

பள்ளி மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க தேசிய அளவில் ‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’ என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

தில்லியில் நாளை சா்வதேச உணவுத் துறை கண்காட்சி- பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்

உணவுத் துறை புத்தாக்கத்தில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்கில், புது தில்லியில் நான்காம் ஆண்டு ‘உலக உணவு இந்தியா’ சா்வதேச கண்காட்சி வியாழக்கிழமை(செப்.25) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

பெரிய கப்​பல்​க​ளுக்கு உள்​கட்​ட​மைப்பு அந்​தஸ்து

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்கட்டமைப்புகளுக்கான பட்டியலில் பெரிய கப்பல்களையும் மத்திய அரசு சோ்த்துள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கைய... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் கொட்டித் தீா்த்த மழை: 10 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீா்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்... மேலும் பார்க்க

விரைவில் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் சேவை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் பெட்டிகள் வரும் அக்டோபா் மாதம் தயாரான பிறகு அதன் சேவை தொடங்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும... மேலும் பார்க்க

‘ஆயுஷ்மான் பாரத்’ பொது சுகாதார புரட்சி- பிரதமா் மோடி பெருமிதம்

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத்’ இலவச மருத்துவக் காப்பீடு திட்டம், நாட்டின் பொது சுகாதார வசதியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். மத்திய பாஜக அரசி... மேலும் பார்க்க