செய்திகள் :

"வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்" - அமித் ஷாவுக்கு அன்பில் பதில்

post image

தேசிய கல்விக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டு அரசை ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும் என மத்தியில் இருக்கும் பா.ஜ.க ஐந்தாண்டுகளுக்கு மேலாக முயற்சித்து வருகிறது.

ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, அதன் மூலம் மறைமுகமாக சமஸ்கிருதத் திணிப்பு, குலக் கல்வி முறை போன்றவற்றைத் தேசிய கல்விக் கொள்கை உள்ளடக்கியிருப்பதாக தி.மு.க அரசு அதை ஏற்க மறுத்துவருகிறது.

டெல்லி சம்ஸ்கிருத நிகழ்ச்சியில் தேசிய கல்விக் கொள்கை குறித்து அமித் ஷா
டெல்லி சம்ஸ்கிருத நிகழ்ச்சியில் தேசிய கல்விக் கொள்கை குறித்து அமித் ஷா

ஏற்காவிட்டால் நிதி கிடையாது என, தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து கல்விக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2,000 கோடியை பா.ஜ.க அரசு நிறுத்திவைத்து, ஏற்றுக்கொண்டால்தான் நிதி மிரட்டல் தொனியில் கூறிவருகிறது.

இத்தகைய சூழலில், டெல்லியில் சமஸ்கிருதம் தொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், "இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். “வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம்.

“இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை” என்கிறோம்." என்று அமித் ஷாவின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய பாஜக vs மாநில திமுக மோதல் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

முதல்வர் பதவி: `இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்; எனக்கு யோகமில்லை’ - அஜித் பவார் வருத்தம்

மகாராஷ்டிராவில் அதிக நாட்கள் துணை முதல்வராக இருந்தவர் என்ற பெருமை அஜித் பவாரை தான் போய் சேரும். எப்படியாவது முதல்வராகிவிடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் அஜித்பவாரால் அப்பதவிக்கு வரமுடியவி... மேலும் பார்க்க

'மண், மலை, கடல் வளங்கள் அதானிக்கு சொந்தம் என்பதே பாஜக கொள்கை' - பொன்னாருக்கு மனோ தங்கராஜ் பதிலடி

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "பா.ஜ.க தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் அங்குள்ள மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்கு, மக்களை குழ... மேலும் பார்க்க

Karl Marx: '21-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்' - கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் பகிர்வு

நவீன உலக வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய வரலாற்றாசிரியர் எரிக் ஹாப்ஸ்பாம், ‘புரட்சியின் யுகம்: 1789-1848’ என்கிற முதல் பாகத்தை இப்படித் தொடங்குகிறார்: ‘ஆவணங்களைவிட சொற்கள் பல நேரங்களில் உரத்துப் பேசு... மேலும் பார்க்க

'கடல் நாட்டுக்கு சொந்தமானது' - எரிவாயு எடுக்கும் திட்டத்தை மீனவர்கள் எதிர்ப்பதால் காட்டமான பொன்னார்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "விகிதாச்சார முறையில் நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவ... மேலும் பார்க்க

Trump : 'தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' - அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் படங்களுக்கு 100% வரி

'அமெரிக்காவின் உற்பத்தியை ஊக்குவிக்கிறேன்...', 'அமெரிக்காவின் பொருட்களை ஊக்குவிக்கிறேன்...' போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' பிரசார வரிசையில், 'அமெரிக்கப் படங்களும்' தற்... மேலும் பார்க்க