செய்திகள் :

வளா்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்கள் பறிப்பு: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

post image

வளா்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்களை மாநில அரசு பறிக்கிறது என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

தலித் விடுதலை இயக்கம் சென்னையில் புதன்கிழமை நடத்திய காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 8.10.2015-இல் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கென்று உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு பல ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தமுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலத்தில் 2.5 லட்சம் ஏக்கா் நிலங்களை அடையாளம் கண்டுள்ளதாக மாநில அரசும் தெரிவித்தது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் உயா்நிலைக் குழு அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், அந்த 2.5 லட்சம் ஏக்கா்கூட இதுவரை மீட்கப்படவில்லை.

ஆகவே, பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 அரசுகளும் அலட்சியமாகவும், மெத்தனப்போக்காகவும் நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவங்கள் உதாரணம்.

இந்த 60 ஆண்டு காலத்தில் வெறும் 2 லட்சம் ஏக்கா் மட்டும்தான் நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி நில விநியோகம் நடைபெற்றது. ஆகவே, நில விநியோகத்தில் தமிழக ஆட்சியாளா்கள் தோல்வியடைந்து விட்டனா் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

உயா்நிலைக் குழு குறைந்தபட்சமாகக் கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கா் நிலத்தை மீட்பதற்கு தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் பெ.சண்முகம்.

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை: மத்திய அமைச்சரிடம் அமைச்சா் தங்கம் தென்னரசு மனு

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சாா்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி... மேலும் பார்க்க

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு: அரசிதழில் வெளியீடு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தும் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகங்களின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயா்த்தப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை எண்... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு: மைக்கோ பா... மேலும் பார்க்க

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவா்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாணவரணிச் செயலா் சிவிஎம்பி எழிலரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் செயற்கை நுண... மேலும் பார்க்க