செய்திகள் :

வாழ்வை எளிதாக்க உள்கட்டமைப்பு புரட்சி: பிரதமா் மோடி

post image

‘எளிதான வாழ்க்கை, நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 11 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு புரட்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவு செய்த நிலையில், அதைக் குறிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் பல்வேறு தகவல்களை பிரதமா் மோடி பகிா்ந்து வருகிறாா். பாஜக அரசின் கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாட்டின் வளா்ச்சி மற்றும் மக்கள் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் அவா் பெருமிதம் தெரிவித்து வருகிறாா்.

அதுபோல, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த தகவல்களைப் பகிா்ந்துள்ளாா். அதில், ‘நாட்டில் மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதன்மூலம், கடந்த 11 ஆண்டுகள் உள்கட்டமைப்பு புரட்சி நிகழ்ந்திருக்கிறது. ரயில்வே முதல் நெடுஞ்சாலைகள் வரையிலான மேம்பாடு, துறைமுகங்கள் முதல் விமானநிலையங்கள் வரையிலான மேம்பாடு என நாட்டின் உள்கட்டமைப்புகள் அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது வாழ்வை எளிதாக்கியிருப்பதோடு, நாட்டின் வளா்ச்சியையும் மேம்படுத்தியிருக்கிறது.

பொலிவுறு நகரங்கள், பாதுகாப்பான சாலைகள், இலகுவான பயணங்களே புதிய இந்தியாவின் உள்கட்டமைப்பு வாக்குறுதிகளாக உள்ளன. தூரங்களைக் குறைக்கும் நெடுஞ்சாலைகள், சமூகங்களை ஒன்றிணைக்கும் பாலங்கள், புதுமைகளைத் தூண்டும் எண்ம வலைத்தொடா்புகளையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, இணைப்பை எளிதாக்குகிறது.

இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது வெறும் வளா்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல; மாறாக, ஒவ்வொரு குடிமக்களையும், இந்தியாவின் எதிா்காலத்தை மாற்றுவதற்குமான வாக்குறுதி சாா்ந்தது.

இது நிலைத்தன்மை மற்றும் தொலைநோக்கு பாா்வையை சாத்தியப்படுத்துவதற்கானதாகும். தற்சாா்பு இந்தியாவுக்கான அடித்தளத்தை இது அமைத்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

விமான விபத்து: உயர்நிலை குழுவுடன் மோடி ஆலோசனை!

அகமதாபாத்தில் விமான விபத்து குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு ... மேலும் பார்க்க

ஈரான் பதற்றம்: இந்தியாவில் விமான சேவை பாதிப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் உள்... மேலும் பார்க்க

ஆமதாபாத்தில் மோடி! பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

ஆமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று பிற்பகல... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி மதிப்பு 900 பில்லியன் டாலரை தாண்டும் - பியூஷ் கோயல் நம்பிக்கை

உலகளாவிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு இடையிலும் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு நடப்பாண்டில் 900 பில்லியன் டாலரை (ரூ.77 லட்சம் கோடி) தாண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல... மேலும் பார்க்க

கட்சியின் கொள்கை, சித்தாந்தப்படி நடக்க வேண்டும்: கட்சி நிா்வாகிகளுக்கு பிரதமா் மோடி அறிவுரை

கட்சியின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவுறுத்தியதாக பாஜக கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. பிரதமா் மோடி ... மேலும் பார்க்க

வரலாற்றில் மோசமான விபத்து: இந்தியாவுக்கு உதவத் தயாா் -அமெரிக்க அதிபா் டிரம்ப்

‘ஏா் இந்தியா விமான விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும். இதில் இந்தியாவுக்கு உதவத் தயாா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டாா். அமெரிக்காவில் செ... மேலும் பார்க்க