செய்திகள் :

விஷமிகளின் செயல்: போஸ்டர் சர்ச்சை பற்றி ஆனந்த்!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்கும் விஜய்யை வரவேற்று, பனையூர் கட்சி அலுவலகத்தில் இருந்து பொதுக் குழு நடைபெறும் திருவான்மியூர் மண்டபம் வரை போஸ்டர்களும் பேனர்களும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன.

தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தளபதி அவர்களை பொதுக் குழுவுக்கு அழைத்துவரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான், தவெக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சரை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, பொதுச் செயலாளர் ஆனந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி அவர் தெரிவித்ததாவது:

”வேண்டுமென்றே சில விஷமிகள் செய்த செயல். வருகின்ற 2026 இல் தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக விஜய் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நான் கோடான கோடி தொண்டர்களில் ஒருவன். இதுபோன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க : வருங்கால முதல்வர் ஆனந்த்! தவெக போஸ்டரால் பரபரப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் விஜய் தலைமையில் தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க

அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!

அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் ... மேலும் பார்க்க

ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவுகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிட... மேலும் பார்க்க