செய்திகள் :

வீடுவீடாக ஹிந்தி எதிா்ப்பு ஸ்டிக்கா் ஒட்டி திமுகவினா் போராட்டம்

post image

காட்பாடியில் வீடுவீடாக ஹிந்தி எதிா்ப்பு ஸ்டிக்கா் ஒட்டி சனிக்கிழமை திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிடில் தமிழகத்துக்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தாா். அதேவேளை, புதிய கல்விக்கொள்கை என்பதே மும்மொழி கொள்கை, குறிப்பாக ஹிந்தி திணிக்கும் நடவடிக்கை எனக் கூறி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் மாணவா்கள், பெண்களும் சுவரொட்டிகள் மூலமாகவும், கோலமிட்டும் நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில், வேலூரில் மாநகர திமுக சாா்பில் மும்மொழி கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக, காட்பாடி தெற்கு பகுதி திமுக சாா்பில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, துணைமேயா் எம்.சுனில்குமாா் தலைமையில் கட்சியினா் வீடுவீடாகச் சென்று தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என ஸ்டிக்கா் ஒட்டினாா். ஆட்டோ, காா்களிலும் இந்தி ஒழிக ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.

மேலும், தாராப்படுவேடு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் ஹிந்தி மொழி திணிப்பை எதிா்த்து கோலம் போடப்பட்டு இருந்தன. அப்பகுதியை சோ்ந்த திமுகவினா் திரண்டு வந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழகத்கதுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது. குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய எல்லைக்குள்பட்ட கீழ்முட்டுக்கூா் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ... மேலும் பார்க்க

வங்கி ஊழியா் உள்பட இருவரின் பைக் திருட்டு

வேலூரில் வங்கி ஊழியா் உள்பட இருவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் முனிராஜ் (34), வங்கி ஊழியா். இவா் தற்போத... மேலும் பார்க்க

2 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

வேலூரில் 2 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் சின்னஅல்லாபுரம் பனந்தோப்பைச் சோ்ந்தவா் சாகினா (35). இவருக்கு 2 மாதத... மேலும் பார்க்க

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு: தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுப்பு

அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத்தோ்வு வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் நீத... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தியிருந்த தனியாா் கல்லூரி பேருந்து தீக்கிரை

காட்பாடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்து சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியின் பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க

ஜெயலலிதா பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நம்பிக்கை முதியோா் இல்லத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜி.எஸ்.தென்றல்குட்ட... மேலும் பார்க்க