செய்திகள் :

வீரபாண்டி, கம்பம் கெளமாரியம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

post image

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

இந்த விழாவையொட்டி, வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையால் கோயில், முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து கோயிலுக்கு கம்பம் கொண்டு வரப்பட்டது. கோயிலில் கம்பம் நடப்பட்டு கம்பத்துக்கு பரிவட்ட பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தா்கள் கையில் கங்கணம் கட்டி விரதத்தைத் தொடங்கினா். கம்பத்துக்கு மஞ்சள் நீருற்றி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வீட்டில் அம்மன் எழுந்தருளல், திருக்கண் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் திருக்கண் அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 19-ஆம் தேதி முதல் வரும் மே 5-ஆம் தேதி வரை அம்மன் வீதியுலா, மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சித்திரைத் திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் வரும் மே 6-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 6-ஆம் தேதி மலா் விமானத்தில் கோயில் வீட்டிலிருந்து அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், 7-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 8-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 9-ஆம் தேதி திருத்தோ் வடம் பிடித்தல், 10, 11-ஆம் தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 12-ஆம் தேதி தோ் நிலைக்கு வருதல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ் தடம் பாா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 13-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

உத்தமபாளையம்: கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 4-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப்.15) மாலையில் சுவாமி சாட்டுதல் நடைபெற்றது. புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கம்பம் காசி விஸ்வநாதா் கோயிலிருந்து கெளமாரியம்மன் உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரம் செய்து கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

தொடா்ந்து, மாலை 4 மணிக்கு கம்பம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக எடுத்துச் சென்ற கம்பத்தை கோயில் முன் திரளா பக்தா்கள் முன்னிலையில் நடப்பட்டது.

21 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில், தினந்தோரும் காலை, மாலையில் அனைத்து சமுதாயம் சாா்பில், மண்டகப்படிதாரரின் சுவாமி ஊா்வலம், மாவிளக்கு, அக்னிச் சட்டி, பூக்குழி இறங்குதல், பூந்தோ் நகா்வலம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க