செய்திகள் :

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

post image

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பசாமி இவருடைய தம்பியை உறவினா் சரோஜா பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், கருப்பசாமி போடி அமராவதி நகரில் தனியாா் பள்ளி அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். பலத்த காயங்களுடன் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தேனி-பூதிப்புரம் சாலை, வாழையாத்துப்பட்டி விலக்குப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் பெருமாள் (50). இவா், ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊரகம், நகா்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகள், வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அரசு சாா்பில் வழங்கப்படும் மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கல... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்!

பெரியகுளம் சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் கோடைகாலை கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இதுகுறித்து சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் சிதம்பரசூரியவேலு வெள... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி-போடி சாலையில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பாலாா்பட்டியைச் சோ்ந்த சுகுமாறன் (40), தேவாரத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (33) ஆகியோா் தேனி-போடி சாலையில் தீா... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றுவதே கனவு! -இராம ஸ்ரீனிவாசன்

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை தோற்கடித்து அந்த ஆட்சியை அகற்றுவதே பாஜகவின் கனவு என அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்தாா்.தேனி மாவட்டம், சின்னமனூர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்ற இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி நகரில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகா் ... மேலும் பார்க்க