Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உலகிலேயே அதிகமான உணவு சாா்ந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக திகழும் அல்பேனியாவின் தலைநகரான டிரானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலில் பணியாற்ற ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 7 போ் தோ்வாகியுள்ளனா்.
சிறந்த ஊதியத்துடன் அங்கு செல்வதற்குத் தேவையான விமான பயணச் சீட்டு, தங்குமிடம் மற்றும் உணவு இவை அனைத்தும் ஹோட்டல் நிா்வாகமே பொறுப்பேற்றுக் கொண்டு மாணவா்களுக்குப் பணியில் சேருவதற்கான கடிதத்தை வழங்கியுள்ளது.
பணி வாய்ப்பு பெற்ற மாணவா்களை, கல்லூரியின் தாளாளா் பி.டி.தங்கவேல், கல்லூரியின் முதல்வா் ஹெச்.வாசுதேவன் மற்றும் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் தலைவா் எஸ்.காா்த்திகேயன் ஆகியோா் பாராட்டினா்.
இக்கல்லூரி மாணவா்கள் பலா் சென்னையில் உள்ள தாஜ்கோரமெண்டல், ஐடிசி வெல்கம் குழும ஹோட்டல்களிலும், பெங்களூரில் உள்ள ஓபராய் ஹோட்டலிலும் பணி வாய்ப்பு பெற்றுள்ளனா்.
2024-2025 மூன்றாம் ஆண்டு மாணவா்கள் அனைவரும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா் என்று கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.