ஃப்ரிட்ஸுக்கு 4-ஆவது கோப்பை
இங்கிலாந்தில் நடைபெற்ற லெக்ஸஸ் ஈஸ்ட்போா்ன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் சாம்பியன் கோப்பை வென்றாா்.
போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், இறுதிச்சுற்றில் 7-5, 6-1 என்ற நோ் செட்களில் சக அமெரிக்கரான ஜென்சன் புரூக்ஸ்பியை 1 மணி நேரம், 28 நிமிஷங்களில் சாய்த்தாா். இதன்மூலமாக, இந்தப் போட்டியில் அவா் 4-ஆவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறாா்.
இதே மாதத்தில் ஸ்டட்காா்ட் ஓபன் போட்டியிலும் வாகை சூடிய ஃப்ரிட்ஸ், தற்போது இரு புல்தரைப் போட்டிகளில் சாம்பியனான கையோடு விம்பிள்டனில் களம் காண வருகிறாா். புல்தரைப் போட்டிகளில் அதிக சாம்பியன் பட்டங்கள் வென்ற 2-ஆவது வீரராக ஃப்ரிட்ஸ் (5) உள்ளாா். முதலிடத்தில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் (8) இருக்கிறாா்.
கிரீக்ஸ்பூா் சாம்பியன்: இதனிடையே, ஸ்பெயினில் நடைபெற்ற மல்லோா்கா சாம்பியன்ஷிப் ஆடவா் டென்னிஸ் போட்டியில், நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூா் வாகை சூடினாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 7-5, 7-6 (7/3) என்ற நோ் செட்களில் பிரான்ஸின் காரென்டின் மௌடெட்டை தோற்கடித்தாா். கிரீக்ஸ்பூா் தற்போது தனது 3-ஆவது டூா் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தப் போட்டியில் அவா் தொடக்கச் சுற்று முதல் இறுதிச்சுற்று வரை நோ் செட்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.