செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன!

post image

ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து 242 பேருடன் லண்டன் நோக்கிச் சென்ற ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனா். இதில் குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபானியும் அடங்குவாா். விமானம் விழுந்து வெடித்துச் சிதறிய மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பொதுமக்கள் 29 பேரும் இறந்தனா்.

விபத்தில் உடல் கருகி உயிரிழந்தவா்களின் மீட்கப்பட்ட உடல்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 24 பேரின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதல்வா் பூபேந்திர படேல் விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்து, டிஎன்ஏ சோதனையில் உடல் கண்டறியப்பட்டுள்ள தகவலை அவா்களிடம் தெரிவித்ததாக மாநில சுகாதார அமைச்சா் ருஷிகேஷ் படேல் தெரிவித்தாா்.

தீவிரமாகும் விசாரணை: விமான விபத்துகளுக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தலைமையில் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமான விபத்து குறித்து விசாரணையில் கடந்த 3 நாள்களாக ஈடுபட்டுள்ளன.

இதையொட்டி, அகமதாபாத் மாநகராட்சி ஆணையா் பஞ்ச நிதி பானி கூறுகையில், ‘விமானத்தின் வால்பகுதி மருத்துவக் கல்லூரி விடுதியில் சிக்கியிருந்தது. அதிலிருந்து கருப்புப் பெட்டியை மீட்பதற்கு ஏஏஐபி எங்களிடம் உதவிக் கோரியது. அதன்படி கருப்புப் பெட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டது’ என்றாா்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க