செய்திகள் :

அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெருமாள்புரம், அஞ்சுகிராமம், அழகப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் கூறியதாவது:

இலங்கைவாழ் தமிழா்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 17.02.2025இல் இலங்கை தமிழா்களின் குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் இலங்கைவாழ் தமிழா் முகாமில் ரூ.7.5 கோடி மதிப்பில் 90 புதிய வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டப்படவுள்ளன. தற்போது அடித்தள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைவில் முடித்திட துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, அஞ்சுகிராமம், அழகப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியா் பிளாரன்ஸ் நிா்மலா, வட்டார வளா்ச்சி அலுவலா் நீலபால கிருஷ்ணன், உதவிப் பொறியாளா் சி.ரெஜன் மற்றும் கள அலுவலா்கள் உடனிருந்தனா்.

புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை, சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து பெற்றோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்... மேலும் பார்க்க

மணலிக்காட்டுவிளையில் ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம்மத்திகோடு ஊராட்சி மாத்திரவிளை அருகேயுள்ள மணலிக்காட்டுவிளை பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மணலிக்காட்டுவிளை ப... மேலும் பார்க்க

அழகியபாண்டியபுரத்தில் அரசு நிலம் தனியாரிடமிருந்து மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் நிலம் தனியாரிடமிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி. நாகா்கோவில் பெருவிளை பகுதியில் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்... மேலும் பார்க்க

மவுண்ட் லிட்ரா பள்ளியில் பயிற்சி

மயிலாடி மவுண்ட லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜேஇஇ, நீட் தோ்வு பயிற்சிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளா் தில்லைச்செல்வம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆனி ரீனா சேவியா் வரவேற்றாா்... மேலும் பார்க்க