செய்திகள் :

Canada: கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள்; யார் இவர்கள்?

post image

கனடாவின் புதிய பிரதமர் கார்னியின் அமைச்சரவையில் அனிதா ஆனந்த் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான (Innovation) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கமலா கேரா சுகாதாரத்துறை அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.

மார்க் கார்னியின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்தியப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் முந்தைய ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையிலிருந்து அப்படியே தொடரும் சில எம்.பிக்களில் இவர்களும் அடக்கம்.

kamal khera

கமல் கெரா: கனடாவின் இளம் பெண் எம்.பி

36 வயது கமல் கேரா டெல்லியில் பிறந்தவர். கனடா நாடாளுமன்ற உறுப்பினரான இளம் வயது பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே கனடாவுக்குக் குடிபெயர்ந்து, யார்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் 2015ம் ஆண்டிலேயே பிராம்ப்டன் மேற்கு தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் குறித்து அரசுப் பதிவில், ஒரு பதிவுசெய்யப்பட்ட செவிலியர், சமூக தன்னார்வலர் மற்றும் அரசியல் ஆர்வலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது எக்ஸ் தளப் பதிவில், "ஒரு செவிலியராக நான் எப்போதும் எனது நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதைத்தான் நான் சுகாதாரத்துறை அமைச்சராக ஒவ்வொரு நாளும் செய்யப் போகிறேன். என்மீதான பிரதமர் மார்க் கர்னியின் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என எழுதியுள்ளார்.

அரசியலில் இதுவரை பல்வேறு பதவிகளை வகித்துள்ள கமல் கெரா, முன்னதாக செவிலியர் பணியாற்றியுள்ளார். அரசியலில் இருக்கும்போதே கொரோனா காலத்தில் மீண்டும் செவிலியர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

அனிதா ஆனந்த்

58 வயது அனிதா ஆனந்த் நோவா ஸ்கோடியா என்ற இடத்தில் பிறந்தவர். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களில் முன்னணியிலிருந்தவர்.

இவரது தந்தை சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anita Anand

கல்வியியலாளர், வழக்கறிஞர் மற்றும் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ள இவர், டொரெண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2019ம் ஆண்டு ஓக்வில்லே தொகுதியின் எம்.பியாக பதவியேற்றார். கருவூல வாரியத்தின் தலைவர், தேசியப் பாதுகாப்பு அமைச்சர், பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

மார்க் கர்னியின் அமைச்சரவைக் கடந்த வெள்ளி அன்று பதவியேற்றது. இதில், 13 ஆண்களும் 11 பெண்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

America: வெனிசுலா மக்களைச் சிறையிலடைத்த அமெரிக்கா; "கடைசியாக போனில் பேசும்போது.." - ஒரு தாயின் அழுகை

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், ... மேலும் பார்க்க

Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Aurangzeb: "பட்னாவிஸ் ஒளரங்கசீப்பைப் போல..." - காங். தலைவர் பேச்சு; மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை

மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற க... மேலும் பார்க்க

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினரின் பொருளாத... மேலும் பார்க்க

``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 - 2021) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று கோடி ரூபாய் வரை சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது... மேலும் பார்க்க

மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு'ன்னார் தலைவர் - `திக் திக்' சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா

``ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி இரவைஎன்னால் மறக்கவே முடியவில்லை'' என்கிறார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்மல்லை சி.ஏ.சத்யா. 'ஏன், அப்போது, என்ன நடந்தது' அவரிடமே பேசினோம்.''1999ம் வர... மேலும் பார்க்க