செய்திகள் :

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

post image

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. சிரோமணி அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மைத்துனரான மஜிதியாவின் வீட்டில் எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை

மஜிதியாவின் மனைவியும் அகாலி தள எம்எல்ஏவுமான கணீவ் கௌர் மஜிதியா 30 பேர் கொண்ட குழு தனது வீட்டிற்குள் நுழைந்ததாகவும்,

சோதனை ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக மஜிதியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோவில்,

போதைப்பொருள் வழக்கில் பகவந்த் மான் அரசு தனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியாததால், பொய்யான வழக்கைத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

ஊழல் தடுப்பு மூத்த காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு சோதனை நடத்தியதியது. நீங்கள் எத்தனை எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தாலும் நான் பயப்படமாட்டேன், நான் பேசுவதைத் தடுக்கமுடியாது.

நான் ப்போதும்பஞ்சாபின் பிரச்னைகள் பற்றிப் பேசி வருகிறேன். தொடர்ந்து அவ்வாறு பேசுவேன் என்று அவர் கூறினார்.

பஞ்சாப் காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு மஜிதியாவுக்கு எதிரான 2021 போதைப்பொருள் வழக்கை விசாரித்து வருகிறது. போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அகாலி தலைவருக்குப் பல முறை சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 3 பேர் பலி! புதியதாக 30 பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநி... மேலும் பார்க்க

2026 முதல் 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வுகள்: சிபிஎஸ்இ

நாடு முழுவதும்2026ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியுள்ளதாக தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி அறிவித்துள்... மேலும் பார்க்க

அவசரநிலை 50 ஆண்டுகள் நிறைவு! மத்திய அமைச்சரவை தீர்மானம்!

அவசரநிலை பிரகடனம் செய்து 50 ஆண்டுகள் நிறைவையொட்டி, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசு, கடந்த 1975 ஆ... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலை கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் முன்னாள் முத... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையைச் சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா!

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் சுமந்து செல்லும் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பல்வேறு இன்னல்களைத் தாண்டி, ஃபால்கன்-9 ரா... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லாவுக்கு மோடி, ராகுல் வாழ்த்து!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மனிதர்களை விண்ணுக்கு அ... மேலும் பார்க்க