அக். 28-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
நத்தம் அடுத்த செந்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில், நத்தம் அடுத்த செந்துறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகிலுள்ள ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்க கட்டடத்தில் இந்த குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. முற்பகல் 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த கூட்டத்தில், நத்தம் வட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.