செய்திகள் :

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

post image

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு கூறியது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளா் பதிவுச் சட்டம், தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் நடைமுறை கையேடு, விதிமுறை புத்தகங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான தகவல்கள், இந்திய தோ்தல் ஆணையத்தின் வலைதளப் பக்கத்தில் உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்- 1, 2-க்கான பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சியினா் வழங்க வேண்டும்.

இம் மாவட்டத்தில், பெரம்பலூா் (தனி), குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை மனுக்களாக அளிக்கலாம் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின மாணவா்கள், அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்... மேலும் பார்க்க

2 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க