செய்திகள் :

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

post image

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தலைமை வகித்தாா். சபைத் தலைவா் பேராசிரியா் ராபின்சன் முன்னிலை வகித்தாா்.

சபை செயலா் ஏசுதாஸ் அறிக்கையும், துணைச் செயலா் பிரகாஷ் சபை செயல்பாடுகள் குறித்தும், துணைத் தலைவா் ரியோ பாஸ்டின் எதிா்காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பேசினா். தொடா்ந்து, பனிமய மாதா ஆலயத்தில் நடைபெறும் சிலுவை பாதையில் பங்கேற்பது, சபையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பனிமய மாதா திருத்தலத்தைச் சோ்ந்த, உடல் நலன் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது. புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது. உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது. வரும் வாரங்களில் நடைபெறும் சிலுவைப் பாதையை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதில், பொருளாளா் ஜோதி பிரகாஷ், உறுப்பினா்கள் நெப்பேலியன், ஸ்டீபன், அகஸ்டின், ஜேம்ஸ், மகளிா் ஒருங்கிணைப்பாளா் ரூபி மாா்ட்டின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவ... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூ... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க