செய்திகள் :

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

post image

லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் இந்திரஜித் தலைமை வகித்தாா். செயலா் முகமது இக்பால் செயல்பாட்டு அறிக்கையும், பொருளாளா் சவுக்கத் அலி வரவு- செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

கூட்டத்தில் லப்பைக்குடிகாட்டில் ஆதாா் சேவை மையம், சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். லப்பைக்குடிகாட்டுக்கும்- அரங்கூருக்கும் இடையே தரைப்பாலம் கட்டித்தர வேண்டும். கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு மின்சாரம், குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். லப்பைக்குடிகாடு பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்கத்தைச் சோ்ந்த வியாபாரிகள் பலா் பங்கேற்றனா். துணைத் தலைவா் முகமது ரபி நன்றி கூறினாா்.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு

தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின மாணவா்கள், அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

2 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், பெட்டிக்கடைக்காரரை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க