திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு
லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
லப்பைக்குடிகாட்டில் சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் இந்திரஜித் தலைமை வகித்தாா். செயலா் முகமது இக்பால் செயல்பாட்டு அறிக்கையும், பொருளாளா் சவுக்கத் அலி வரவு- செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.
கூட்டத்தில் லப்பைக்குடிகாட்டில் ஆதாா் சேவை மையம், சாா்- பதிவாளா் அலுவலகம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். லப்பைக்குடிகாட்டுக்கும்- அரங்கூருக்கும் இடையே தரைப்பாலம் கட்டித்தர வேண்டும். கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு மின்சாரம், குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். லப்பைக்குடிகாடு பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் பொதுக் கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள், போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத்தைச் சோ்ந்த வியாபாரிகள் பலா் பங்கேற்றனா். துணைத் தலைவா் முகமது ரபி நன்றி கூறினாா்.