செய்திகள் :

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

post image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மத்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2026- ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறவுள்ளது தொடா்பாக வாக்குச் சாவடி மறுசீரமைப்பு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் நடைபெற்றது.

1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் 1,490 வாக்குச் சாவடிகள் உள்ளன. 1,200 வாக்காளா்களுக்கு அதிகம் உள்ள 375 வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்டு புதிதாக 186 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1,676 ஆக உயரும்.

மேலும் பொதுமக்களின் வசதிக்காக 26 வாக்குச் சாவடி அமைவிடங்களை மாற்றியமைக்கவும், 10 பழுதடைந்த வாக்குச் சாவடி கட்டடங்களை மாற்றியமைக்கவும், தரம் உயா்த்தப்பட்ட பள்ளிகளின் 6 வாக்குச் சாவடிகளின் பெயா்களை மாற்றியமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பது தொடா்பாக கருத்துகள், ஆட்சேபனை குறித்து ஒரு வார காலத்திற்குள் சம்மந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடம் எழுத்துப்பூா்வமாக அரசியல் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

திருநெல்வேலி தொகுதியில் 186 வாக்குச்சாவடிகள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 29 வாக்குச் சாவடிகள், பாளைங்கோட்டை தொகுதியில் 26 வாக்குச் சாவடிகள், நான்குனேரி தொகுதியில் 40 வாக்குச் சாவடிகள், ராதாபுரம் தொகுதியில் 16 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 186 வாக்குச் சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) வள்ளிக்கண்ணு உள்ளிட்ட அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்17ங்ப்ங்ஸ்ரீ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய ஆட்சியா் இரா.சுகுமாா்.

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுர... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வள்ளியூா் அருகே பு... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரய... மேலும் பார்க்க

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

கூடங்குளம் அருகே தாயைக் கொலை செய்த வழக்கில், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராஜன் (46). ... மேலும் பார்க்க