செய்திகள் :

அடுக்குமாடியில் வெடித்த சிலிண்டர்; முன்னாள் காதலன் உதவியால் நடந்த கொலை - என்ன நடந்தது?

post image

டெல்லி திமர்பூர் பகுதியில் இம்மாத மத்தியில் அடுக்கு மாடி குடியிருப்பில் ராம்கேஷ் மீனா (32) என்பவர் தீப்பிடித்து எரிந்து கிடந்தார். அவர் ஏ.சி.யில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக ஆரம்பத்தில் போலீஸார் நம்பினர். ஆனால் விசாரணையில் மீனா கொலை செய்யப்பட்டிருப்பது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரிய வந்தது. மீனாவுடன் `லிவ் இன்' ரிலேசன்ஷிப்பிலிருந்த அம்ரிதா(21), அவரின் முன்னாள் காதலன் ஸ்மித் மற்றும் மேலும் ஒருவருடன் சேர்ந்து கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் முதலில் மீனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்னர் அவரது உடல் மீது ஆயில், நெய் ஊற்றி தீவைத்துள்ளனர். அதோடு காஸ் சிலிண்டரையும் திறந்துவிட்டதால் வீடு தீப்பிடித்து சிலிண்டர் வெடித்துவிட்டது. கைது செய்யப்பட்ட அம்ரிதாவிடம் விசாரணை நடத்தியதில் மீனா எடுத்த அம்ரிதாவின் வீடியோவை டெலிட் செய்ய மறுத்து அதனைக் காட்டி மிரட்டி வந்ததால் இக்கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,'' மீனாவும், அம்ரிதாவும் கடந்த மே மாதம் நொய்டாவில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவிற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்களிடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

மீனா, அம்ரிதா
மீனா, அம்ரிதா

அந்த அறிமுகத்தால் அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு காபி ஷாப்பிற்கு சென்று காபி குடித்துவிட்டு போன் நம்பரையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு இருவரும் அடிக்கடி போனில் தொடர்பில் இருந்துள்ளனர். அத்தொடர்பு அவர்களுக்குள் காதலை வரவைத்தது. இதனால் இருவரும் டெல்லியில் வாடகை வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். அவர்கள் தனிமையில் இருந்தபோது இருவரும் சேர்ந்தே வீடியோ எடுத்துக்கொண்டனர்.

ஆனால் அம்ரிதாவின் வாழ்க்கையில் அவரின் முன்னாள் காதலன் சுமித் நுழைய ஆரம்பித்தார். அம்ரிதா மொரதாபாத்தில் இருந்தபோது இருவரும் காதலித்தனர். அம்ரிதா டெல்லி வந்தபிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் கடந்த செப்டம்பரில் இருவரும் மீண்டும் சேர்ந்தனர். அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால் அம்ரிதா மீனாவை விட்டுவிலக ஆரம்பித்தார்.

இதனால் மீனா தனிமையை உணர்ந்தார். மற்றொரு புறம் அம்ரிதா சமூக வலைதளப் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டுவந்திருக்கிறார். அதில் சுமித்தும் இருந்திருக்கிறார். அம்ரிதாவுடன் மீனா தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து இருவரும் தனிமையிலிருந்த வீடியோக்களை அம்ரிதாவிற்கு அனுப்பி மீனா மிரட்ட ஆரம்பித்தார். உடனே கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அம்ரிதாவும் எச்சரித்துள்ளார்.
அதோடு வீடியோக்களை டெலிட் செய்ய தன்னிடம் ஹார்டு டிஸ்க்கை கொடுக்கும்படி மீனாவிடம் அம்ரிதா கேட்டார். ஆனால் மீனா கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நேரத்தில் அம்ரிதா தன் பழைய காதலன் சுமித்துடன் சேர்ந்து வேறு ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினார். அவர்கள் இருவரும் சேர்ந்து மீனாவின் மிரட்டல் குறித்து ஆலோசித்தனர்.

Representational Image
Representational Image

இறுதியில் மீனாவின் வீட்டிற்குள் சென்று ஹார்டு டிஸ்க்கை திருட திட்டம் தீட்டினர். இதற்காக அம்ரிதா முதலிலேயே மீனாவின் வீட்டிற்கு சென்றார். அவர் மீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அவரது கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்தாரா என்று தெரியவில்லை.

ஆனால் நள்ளிரவில் சுமித்தும் அவரின் நண்பரும் ஹார்ட் டிஸ்க்கை எடுக்கும் நோக்கத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர். ஆனால் நள்ளிரவு சண்டையில் மீனா இறந்து போனார். இதையடுத்து இதனை விபத்து போன்று காட்ட முடிவு செய்து நெய், ஆயில் ஊற்றி சிலிண்டரைத் திறந்து விட்டு தீ வைத்துள்ளனர். இதில் மீனா முற்றிலும் எரிந்து போனார் என்று தெரிவித்தார். கைதான மூன்று பேரும் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க

மும்பை: `காவல் நிலையம் அருகே போதைப்பொருள் தொழிற்சாலை; 5 ஆண்டுகள் விற்பனை ஜோர்' - போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் எம்.டி. எனப்படும் ஒருவகையான போதைப்பொருளின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்தில் எளிதில் தயாரித்துவிடலாம் என்பதால் சிலர் வீடுகளில் இதனை தயாரித்து விற்பனை செய்கின்ற... மேலும் பார்க்க

நெல்லை: வீடு புகுந்து மாணவிகள் மீது கொடூரமாக தாக்கிய ரவுடி கும்பல்; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முன்பகை காரணமாக வீட்டுக்குள் நுழைந்த ரௌடி கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து வீசியதுடன், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள். அதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நெல்லை மாவட்... மேலும் பார்க்க

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலை... மேலும் பார்க்க

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் ... மேலும் பார்க்க