செய்திகள் :

அடுத்த வாரம் இந்தியா வருகிறாா் அமெரிக்க துணை அதிபா்

post image

அமெரிக்க துணை அதிபா் ஜெ.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் 3 குழந்தைகளுடன் அடுத்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.

அமெரிக்க அதிபரின் டிம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பால் சா்வதேச அளவில் பொருளாதார நிலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தாா். வரி விதிப்பு விவகாரத்தை தீா்ப்பதற்காக அமெரிக்கா-இந்தியா இடையே விரைவில் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்க துணை அதிபரின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பயணம் குறித்து நியூயாா்க்கில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வான்ஸின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

துணை அதிபா் வான்ஸ் தனது குடும்பத்துடன் இத்தாலி, இந்தியாவுக்கு ஏப்ரல் 18 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். இருநாட்டுத் தலைவா்களுடனும் பொருளாதாரம், வா்த்தகம், பிராந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து வான்ஸ் விவாதிப்பாா்.

முதலில் இத்தாலி செல்லும் அவா், அந்நாட்டு பிரதமா் மெலோனி உள்ளிட்ட தலைவா்களைச் சந்திக்கிறாா். அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் அவா் தில்லி, ஜெய்பூா், ஆக்ராவுக்கு தனது குடும்பத்துடன் பயணிக்கிறாா்.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்களை ஏப்ரல் 21-ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறாா். இந்தியாவில் கலாசார பெருமைமிக்க இடங்களுக்கு சென்றும் அவா் பாா்வையிடுகிறாா் என்றாா்.

துணை அதிபரின் மனைவி என்ற கௌரவத்துடன் உஷா வான்ஸ் தனது பூா்விகமான இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறாா்.

உஷாவின் தந்தை கிரிஷ் விமானவியல் பொறியாளா். அவா் சாண்டியோகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினாா். தாய் லட்சுமி மூலக்கூறு உயிரியல் துறை பேராசிரியை ஆவாா். இவா்கள் 1970-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்துவிட்டனா்.

கனடாவுக்கு உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவி சுட்டுக் கொலை!

கனடாவின் ஹாமில்டனில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த இந்திய மாணவியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் ஆன்டாரியோ அருகேயுள்ள ஹாமில்டனில் அமைந்துள்ள மோஹாக் கல்லூரி... மேலும் பார்க்க

நெப்ராஸ்கா ஆற்றில் சிறிய ரக விமானம் விபத்து: 3 பேர் பலி!

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் சிறிய ரக விமானம் ஆற்றில் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறிய ரக விமானம் பிளாட் ஆற்றின் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப... மேலும் பார்க்க

யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்பு

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அ... மேலும் பார்க்க

‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வ... மேலும் பார்க்க

அணு மின் நிலையம்: ரஷியாவுடன் புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்

தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க