செய்திகள் :

அதிபரின் நன்கொடையால் வெடித்த மோதல்!

post image

கென்யா நாட்டு அதிபர் தேவாலயத்திற்கு அளித்த நிதியுதவியினால் அந்நாட்டில் மோதல் வெடித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஜீசஸ் வின்னர் மினிஸ்ட்ரிக்கு சொந்தமான தேவாலயத்திற்கு 20மில்லியன் சில்லிங் அளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பானது இந்திய ரூ.1.35 கோடி எனக் கணக்கிடப்படுகிறது.

இந்த செயலானது அந்நாட்டின் விலைவாசி உயர்வினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை பெற்றது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் அந்த தேவாலயத்தை கைப்பற்ற முயன்றனர். இதனால், அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அப்போது, போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருள்களை தீயிட்டு கொளுத்தியும் பாறைகள் குவித்தும் அப்பகுதி சாலைகளை முடக்கினர். இருப்பினும், போலீஸாரின் பாதுகாப்புடன் தேவாலயத்தில் பக்தர்கள் பிராத்தனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிக்க: தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியதுடன், மோதலில் ஈடுபட்டதாக 38 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ரூட்டோ பதவியேற்றது முதல் தொடர்ந்து அவர் விதித்து வரும் வரிகளால் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த நிதிநிலை அறிக்கையில் விதிக்கப்பட்டிருந்த வரி உயர்வைத் தொடர்ந்து நாடுத்தழுவிய மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால், அந்த வரிகள் விலக்கப்பட்டது.

மேலும், கடந்தாண்டு (2024) தேவாலயங்களை அரசியலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும் எனக் கூறி கென்யா நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஏஞ்சலிக்க தலைவர்கள் நன்கொடைகள் பெறுவதற்கு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

படைகளைச் சந்திக்க எஸ்தோனியா செல்கிறார் இளவரசர் வில்லியம்!

உக்ரைனுக்கு ஆதரவாக எஸ்தோனியா நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள பிரிட்டன் நாட்டு படைகளைச் சந்திக்க முதல்முறையாக அந்நாட்டுக்கு முடி இளவரசர் வில்லியம் பயணம் மேற்கொள்கிறார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் நாட்டுக்கு... மேலும் பார்க்க

முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறு பரப்பிய செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த 2 பெண் பத்திரிக்கையாளர்களை ஹைதரபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்... மேலும் பார்க்க

உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!

சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பல... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது! - அன்புமணி ராமதாஸ்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மும்மொழிக் கொள்கையை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க