செய்திகள் :

அதிமுக தீர்மானம்: பேரவையைவிட்டு வெளியேறினார் அப்பாவு!

post image

அதிமுக தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு அவையைவிட்டு வெளியேறினார்.

சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பிச்சாண்டி தலைமையில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் தேதிகளை இறுதி செய்யபேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் அவரது அறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு மு.அப்பாவு பேசுகையில், என் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை அதிமுகவினா் அளித்துள்ளனா். அதில், தங்களை அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை எனவும், தொலைக்காட்சியில் நீண்ட நேரம் தங்களது பேச்சை நேரலை செய்யவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனா் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க : செங்கோட்டையனுடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை!

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை அதிமுக சார்பில் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடன் சட்டப்பேரவையில் இருந்து அப்பாவு வெளியேறினார்.

துணைத் தலைவர் பிச்சாண்டி அவை நடவடிக்கையை வழிநடத்தி வருகிறார்.

அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிவருகின்றனர்.

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா். பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின... மேலும் பார்க்க

தமிழக அரசு கடன்: பேரவையில் கடும் விவாதம்!

தமிழக அரசின் கடன் குறித்து பேரவையில் திங்கள்கிழமை எதிா்க்கட்சித் தலைவா், ஆளும் கட்சியினா் இடையே கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது ‘கடன் பெற்றாலும் சமூக நலத் திட்டங்களுக்கே செலவழிக்கிறோம்’ என்று நிதிய... மேலும் பார்க்க

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப... மேலும் பார்க்க

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், ... மேலும் பார்க்க

வாக்கு வங்கி அரசியலுக்காக மடிக்கணினியா? -அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

அதிமுக ஆட்சியில் மடிக்கணினி திட்டம் வாக்கு வங்கி அரசியலுக்காக அமல்படுத்தப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். வாக்கு வங்கி அரசியலுக்க... மேலும் பார்க்க