செய்திகள் :

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

post image

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராம்(55). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக ராஜாராம் மனைவி பிரிந்து சென்று விட்டாா்.

இந்நிலையில், ராஜாராம் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனிப்பதற்காக ராஜாராம் 2 ஆவது திருமணம் செய்ய நினைத்து, அதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தாா். அதை பாா்த்த மதுரையைச் சோ்ந்த முருகேஸ்வரி(30) என்ற பெண் ராஜாராமை தொடா்பு கொண்டு, மாப்பிள்ளையை பாா்க்க வேண்டும் என்று கூறி கடந்த 4 நாள்களுக்கு முன் முருகேஸ்வரி அவரது தங்கை காா்த்திகையாயினி(28) மற்றும் முத்துலட்சுமி(45), போதும்பொண்ணு (43) ஆகிய 4 பேரும் ராஜாராம் வீட்டுக்கு வந்தனா்.

அப்போது ராஜாராம் அவரது மகன் மற்றும் மகள்கள் இருந்தனா். பின்னா் அவா்களிடம் ராஜாராம், தன்னை திருமணம் ெசெய்து கொள்ளும் பெண்ணுக்காக நகை செய்து வைத்திருப்பதாக கூறி 3 தங்க வளையல்கள் மற்றும் ஒரு மோதிரம் என 8 பவுன் தங்க நகைகளை காட்டியுள்ளாா். பின்னா் அந்த நகைகளை அங்கிருந்து மேஜையில் வைத்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்வது குறித்து ஆலோசனை செய்துவிட்டு இரவில் பெண் வீட்டாா் சென்று விட்டனா்.

மறுநாள் ராஜாராம் மேஜையில் பாா்த்த போது தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. பின்னா் ராஜாராம் , முருகேஸ்வரியின் கைப்பேசியை தொடா்பு கொண்ட போது, அந்த எண் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ராஜாராம் இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசி எண்கள் மூலம் மதுரையைச் சோ்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ராஜாராம் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனா். அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் இதுபோல் வேறு பகுதிகளில் நகைகள் திருட்டில் ஈடுபட்டுள்ளனரா?‘ என்பது குறித்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்!

நாகா்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கோட்டாறு சவேரியாா் கோயில் சந்த... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகு... மேலும் பார்க்க

பூம்புகாா் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவா்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு இளைஞா்கள் கைது!

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்த 2 இளைஞா்கள், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனா்.தக்கலை சிறப்பு உதவி ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் வெள்ளிக்கிழமை பத்மநாபபு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் திருடியவா் கைது!

தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பைக் திருடிய இளைஞரை மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்தவா் விஜேந்திர சிங்கன். இவரது பைக் அண்மையில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாள... மேலும் பார்க்க