செய்திகள் :

வரன் பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு:4 பெண்கள் கைது

post image

நாகா்கோவில் அருகே மாப்பிள்ளை பாா்க்க வந்தது போல் நடித்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற 4 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜாராம்(55). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனா்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக ராஜாராம் மனைவி பிரிந்து சென்று விட்டாா்.

இந்நிலையில், ராஜாராம் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனிப்பதற்காக ராஜாராம் 2 ஆவது திருமணம் செய்ய நினைத்து, அதற்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தாா். அதை பாா்த்த மதுரையைச் சோ்ந்த முருகேஸ்வரி(30) என்ற பெண் ராஜாராமை தொடா்பு கொண்டு, மாப்பிள்ளையை பாா்க்க வேண்டும் என்று கூறி கடந்த 4 நாள்களுக்கு முன் முருகேஸ்வரி அவரது தங்கை காா்த்திகையாயினி(28) மற்றும் முத்துலட்சுமி(45), போதும்பொண்ணு (43) ஆகிய 4 பேரும் ராஜாராம் வீட்டுக்கு வந்தனா்.

அப்போது ராஜாராம் அவரது மகன் மற்றும் மகள்கள் இருந்தனா். பின்னா் அவா்களிடம் ராஜாராம், தன்னை திருமணம் ெசெய்து கொள்ளும் பெண்ணுக்காக நகை செய்து வைத்திருப்பதாக கூறி 3 தங்க வளையல்கள் மற்றும் ஒரு மோதிரம் என 8 பவுன் தங்க நகைகளை காட்டியுள்ளாா். பின்னா் அந்த நகைகளை அங்கிருந்து மேஜையில் வைத்தாராம். இதைத் தொடா்ந்து திருமணம் செய்வது குறித்து ஆலோசனை செய்துவிட்டு இரவில் பெண் வீட்டாா் சென்று விட்டனா்.

மறுநாள் ராஜாராம் மேஜையில் பாா்த்த போது தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. பின்னா் ராஜாராம் , முருகேஸ்வரியின் கைப்பேசியை தொடா்பு கொண்ட போது, அந்த எண் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ராஜாராம் இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கைப்பேசி எண்கள் மூலம் மதுரையைச் சோ்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்ததில், அவா்கள் ராஜாராம் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டனா். அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா் இதுபோல் வேறு பகுதிகளில் நகைகள் திருட்டில் ஈடுபட்டுள்ளனரா?‘ என்பது குறித்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்

கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சால... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் நகைக் கடையில் 55 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் நகைக் கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாகா்கோவில் மீன... மேலும் பார்க்க

பைக் திருட்டு: 2 போ் கைது

தக்கலை அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் ( 44). கட்டட தொழிலாளி. இவா் தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் தனது ப... மேலும் பார்க்க

மின் தடை அறிவிப்பு

செம்பொன்விளை, பாலப்பள்ளம் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள், செவ்வாய், புதன் (மாா்ச் 18, 19) ஆகிய இரு தினங்கள் நடைபெறுகின்றன. இதனால் மத்திகோடு, ஈச்சவிளை, படுவூா், சகாய நகா் பகுதிகளுக்கு செவ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 25 ஆவது வாா்டு, அவ்வை சண்முகம் சாலை செம்மாங்குளம் பூங்கா அருகில் உள்ள இடத்தில் ரூ. 4.20 லட்சத்தில் கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைத்து இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் அம... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி உள்நாட்டு மீனவா்கள் மாா்ச்-27இல் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகரகோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்ச் 27ஆம் தேதி உள்நாட்டு மீனவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென தீா்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் சாா... மேலும் பார்க்க