செய்திகள் :

அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயா்வு

post image

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து ஹூதிக்கள் தலைமையிலான அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைநகா் சனாவிலும் பிற மாகாணங்களிலும் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் ஐந்து போ் பெண்கள்; 2 போ் சிறுவா்கள். இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமாா் 100 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வருகிறது.

இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.

இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினா். பின்னா் காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று அந்தப் படை தெரிவித்தது.

இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா். இதைத்தொடா்ந்து யேமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.

செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹுதி கிளா்ச்சியாளா்களின் திறனை அழிப்பதற்காக இந்தத் தாக்கதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறியுள்ளாா்.

பிரிட்டன் போரின் கடைசி விமானி 105 வயதில் மரணம்!

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட பிரிட்டன் போரின் கடைசி விமானி ஜான் ஹெமிங்வே வயது மூப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 105.இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் பிரிட்டன் ராணுவத்தினர் ச... மேலும் பார்க்க

தேநீர் சிந்திய நிறுவனத்துக்கு ரூ. 432 கோடி இழப்பு!

அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன ஊழியரின் அலட்சியத்தால் பாதிப்படைந்தவருக்கு இழப்பீடாக ரூ. 432 கோடி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.அமெரிக்காவில் மைக்கேல் கார்சியா என்பவர், பிரபல தேநீர் விற்பனையகமான... மேலும் பார்க்க

ஸ்பெயினில் கடும் வெள்ளம்: 350 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஸ்பெயின் நாட்டின் தெற்கு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தெற்கு பகுதிய... மேலும் பார்க்க

250 கிலோ எடையுடைய டிவிட்டர் இலச்சினை ஏலம்!

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவன... மேலும் பார்க்க

பூமி திரும்பும் 4 பேரின் பணிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகள்!

விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரின் பணிகளை மேற்கொள்ளவுள்ளவர்களின் பெயர்களை நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அடுத்த 6 மாதங்களுக்குத் தங்கியிரு... மேலும் பார்க்க

இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைப் பெற்றால் தாய்க்கு வருமான வரி விலக்கு!

ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 30 வயது வரையிலும், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வருமான வரி விலக்கு அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு ... மேலும் பார்க்க