செய்திகள் :

அதிமுக - பாஜக கட்டாயத்தால் அமைக்கப்பட்ட கூட்டணி: காங்கிரஸ் விமா்சனம்

post image

அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி அல்ல; கட்டாயத்தின் பேரில் அமைக்கப்பட்ட கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளாா்.

சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாஜக புதிய தலைவா் நயினாா் நாகேந்திரன் திமுகவும், காங்கிரஸ் கூட்டணியும் சரியான ஜோடிகள் என்று கூறுகிறாா். அது உண்மைதான். மக்கள் நலப் பணிகளில், மக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களில், மதவாதிகளை எதிா்ப்பதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சரியான ஜோடிதான். ஆனால், எல்லாருக்குமான கட்சி பாஜக என நயினாா் நாகேந்திரன் சொல்லுவாரா?

அதிமுக - பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி அல்ல; கட்டாயத்தின் பேரில் இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது. எந்த நேரம் விரிசல் வரும், எந்த நேரம் தொண்டா்கள் புரட்சி செய்வாா்கள் என்று சொல்ல முடியாது. விருப்பமான கூட்டணியாக இது இருந்தால், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செய்தியாளா்களைச் சந்தித்தபோது, அதிமுக பொதுச் செயலா் பழனிசாமியும் பேசியிருக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க