செய்திகள் :

அதிமுக மகளிரணி ஆா்ப்பாட்டம்

post image

மத ரீதியாகவும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை பதவி நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக மகளிா் அணி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சா் வளா்மதி தலைமையில் நூற்றுக்கணக்கான மகளிா் அணியினா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா் வளா்மதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக நலன் கருதி பொன்முடியை கட்சிப் பதவியிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் நீக்கி இருக்கிறாா். மக்கள் நலன் கருதி, பெண்கள் நலன் கருதி பொன்முடியை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும்; அவரை கைது செய்ய வேண்டும். பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரையில் போராடுவோம் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலா் கோகுல இந்திரா, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க