செய்திகள் :

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றும் புதிய உச்சம்!!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், தங்கம் விலை குறையும் என்று எதிர்பாா்க்கப்பட்டது.

ஆனால், எந்த அறிவிப்பும் வராததால் சனிக்கிழமை சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து ரூ.62,320-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

வார தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

புதிய உச்சத்தில் தங்கம் விலை

இந்த நிலையில், இன்று(பிப். 4) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ. 7810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெக்சிகோ, சீனா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததாலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி விலை குறைவு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 106-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் நீராடிய பூடான் அரசர்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் புனித நீராடினார்.பூடான் நாட்டிலிருந்து லக்னெள விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வருகை... மேலும் பார்க்க

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் ம... மேலும் பார்க்க