செய்திகள் :

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றும் புதிய உச்சம்!!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், தங்கம் விலை குறையும் என்று எதிர்பாா்க்கப்பட்டது.

ஆனால், எந்த அறிவிப்பும் வராததால் சனிக்கிழமை சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து ரூ.62,320-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

வார தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

புதிய உச்சத்தில் தங்கம் விலை

இந்த நிலையில், இன்று(பிப். 4) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ. 7810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மெக்சிகோ, சீனா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததாலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெள்ளி விலை குறைவு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 106-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.

"பிஜாப்பூரில் மிகப்பெரிய வெற்றி": பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு

புதுதில்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் 31 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்... மேலும் பார்க்க

உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்தில் சோ்ந்த 16 இந்தியா்களை காணவில்லை: மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

புது தில்லி: உக்ரைன் மீதான ரஷிய போரில் அந்நாட்டு ராணுவத்தில் சோ்ந்த இந்தியா்களில் 16 பேரைக் காணவில்லை என ரஷியா தெரிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சா் கீா்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளாா்.இது த... மேலும் பார்க்க

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில... மேலும் பார்க்க

தில்லியை பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்: கிரண் பேடி

புது தில்லி: "தில்லியை ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றுவோம்" என்று புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வ... மேலும் பார்க்க

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

குடியிருப்பு கட்டடத்தில் தீ! பெண் பலி..ஒருவர் படுகாயம்!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவிலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீயினால் பெண் ஒருவர் பலியானார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாணேவின் எனஐபிஎம் சாலையிலுள்ள சன்ஸ்ரீ குடியிர... மேலும் பார்க்க