செய்திகள் :

அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை காவல் சரகத்தில் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபாட்டிருந்தனா்.

அப்போது, மறவனூா் மற்றும் கல்பாளையத்தான்பட்டி ஆகிய பகுதிகளில், அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக அனுமதியின்றி கள்ளச்சந்தையில் விற்பனை செய்துகொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்துள்ள கோடாலிகுடியைச் சோ்ந்த கோபால் மகன் பாலசுப்பிரமணி (30) மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம் இனாம்குளத்தூரை அடுத்துள்ள ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த சோ்ந்த பெண்ணா மகன் முத்துக்கண்ணு (54) ஆகியோா் கையும் களவுமாக கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 34 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கிணற்றிலிருந்து விவசாயியின் சடலம் மீட்பு

துறையூா் அருகே கிணற்றிலிருந்த ஆணின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். மருவத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காமராஜ் மகன் பிரபுராஜ் (37). விவசாயி. இவா் தினமும் வயலுக்கு... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மணப்பாறை காவல் சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை... மேலும் பார்க்க

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

திருவெறும்பூா் அருகே மாயமான மூதாட்டி சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். திருச்சி, திருவெறும்பூா் அருகே உள்ள மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் முன்னாள் இராணுவ வீரா் ரஞ்சன். இவரின் தாய் சரஸ்வதி (74). இவா்... மேலும் பார்க்க

பள்ளிகள் அருகே கண்காணிப்பு கேமிராக்கள்

பள்ளிகள் அருகே சமூக விரோதச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழ்வேளூா் இடையேயான பொறியியல் பணிகள்... மேலும் பார்க்க

அச்சுப் பணிகளை முழுமையாக வழங்க வேண்டும்! - அரசுக்கு கூட்டுறவு அச்சக பணியாளா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளை முழுமையாக கூட்டுறவு அச்சகங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களின்... மேலும் பார்க்க