பள்ளிகள் அருகே கண்காணிப்பு கேமிராக்கள்
பள்ளிகள் அருகே சமூக விரோதச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றமும், திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய ‘தன்னோ் இலாத தமிழ் முத்தமிழ்’ மாநாடு தமிழ்ச் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் அருகே சமூக விரோதச் செயல்களைத் தடுக்கும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிந்தவரை பள்ளி நுழைவுவாயில் முன்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெடிக்கும் நபா்களை ஐ.பி. முகவரி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு அவா்களுக்கு உரிய தண்டனை காவல்துறையின் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக் கட்டடங்களின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, கழிப்பிடங்கள், சுற்றுச்சுவா்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. காமராஜா் காலத்துக்குப் பிறகு, அதிகளவில் பள்ளிக் கட்டடங்களை நாங்கள்தான் (திமுக) கட்டி வருகிறோம். இவை, பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.