செய்திகள் :

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

post image

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் மகளிர் பெருவிழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

அன்புமணியை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”உலகில் அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை, எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு, சுதந்திரமாக செயல்படுவது அவரவர் உரிமை. கட்சியில் ஒருவர் போனால், இன்னொருவர் வருவார்” என்றார்

மேலும் அவர் கூறுகையில், ”அன்புமணி விவகாரம் தொடர்பாக பாமக சட்டவிதிகளை ஆராய்ந்து நாளை(ஜூன் 2) பதில் அளிக்கிறேன்.

என்னை பின்பிலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க