செய்திகள் :

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

இதனிடையே, நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் வியாழக்கிழமை காலை ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது ராமதாஸ் பேசியதாவது:

”நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் எனக்கு இந்த பதவியிறக்கம் என்று அன்புமணி சொல்லி இருக்கிறார். மக்களையும் கட்சித் தலைவர்களையும் திசைதிருப்பும் முயற்சியாகும். செய்த தவறுகளை மறைத்து மக்களிடமும் கட்சியினரிடமும் அனுதாபம் பெறும் முயற்சிக்கிறார்.

இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரை கொண்ட மருந்தைதான் பதிலை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறுசெய்தது அன்புமணி அல்ல, எனது சத்தியத்தை மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கிய நான்தான் தவறு செய்தேன்.

தவறான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தது அன்புமணிதான். புதுச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரீகமும் சபை நாகரீகமும் கடைபிடிக்காமல், எடுத்தேன் கவிழ்தேன் என பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டது யார்?

வீட்டில் எனக்கும் கட்சியில் அன்புமணிக்கு உதவியாக இருக்க முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமனம் செய்தேன். மேடையிலேயே மறுப்பு தெரிவித்தது சரியான செயலா? அனைவரின் முன்பும் காலை ஆட்டியது, மைக்கை வீசியது, பனையூரில் அலுவலகம் தொடங்கியிருக்கிறேன் என்றது எல்லாம் சரியான செயலா?

கட்சியை ஒரே நொடியில் உடைத்து நொறுக்கியது யார்? கட்டுப்பாடோடு நடத்திய வந்த கட்சிக்கு கலங்கத்தை அன்புமணி ஏற்படுத்திவிட்டார். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்து வந்தார். எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்கிறது.

தமிழ்குமரன் பொதுக்குழு கூட்டத்துக்கு வரக்கூடாது என்று அன்புமணி கூறினார். தாய் சரஸ்வதி மீது பாட்டிலை அடித்து தாக்கவும் அன்புமணி முயற்சித்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்

மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார் என்று கமல்ஹாசன் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் தெரிவித்துள்ளார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நா... மேலும் பார்க்க

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க