செய்திகள் :

அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா!

post image

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று(ஆக. 20) தாக்கல் செய்யப்பட்டது.

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் நண்பகல் 11 மணி வரை, அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவா்களின் தொடர் முழக்கம் அலுவல்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் மக்களவை பகல் 12 மணிக்கு கூடிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அமைச்சர் தாக்கல் செய்யதார்.

இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும். சூதாட்டச் செயலிகளை பிரபலங்கள் விளம்பரப்படுத்தத் தடை, செயலிகளைத் தடை செய்வது உள்ளிட்டவைகள் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற மசோதாவை மத்திய உள்துறை அமித் ஷா தாக்கல் செய்வுடன், மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மசோதாவின் நகல்களை கிழித்து தூக்கியெறிந்தனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் புதன்கிழமையும் அமளி நீடித்தது.

இதையும் படிக்க: தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

A bill to ban online gambling was introduced in the Lok Sabha today (Aug. 20) amid opposition from opposition parties.

ஆந்திரத்தில் குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூல் மாவட்டத்தில், குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி மற்றும் 5 சிறுவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ணூல் மாவட்டத்தின், சிகேலி கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்த 10 மு... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவி... மேலும் பார்க்க

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்றிய மத்திய அரசு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்... மேலும் பார்க்க

பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், முதல்வர்க... மேலும் பார்க்க

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்... மேலும் பார்க்க