செய்திகள் :

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

post image

இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த சுனில் பெஞ்சமின் (32 வயது) முதல்முறையாக இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர் ஏஆர்எஃப்டி எனப்படும் ஆர்மி ரெட் கால்பந்து அணியில் விளையாடுகிறார்.

சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைக்கான 35 பேர்கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார்.

இந்திய கால்பந்து அணிக்கு 2005-க்குப் பிறகு முழுநேர பயிற்சியாளராக காலித் ஜமில் நியமிக்கப்பட்டார். அவரும் இதே மாதிரி அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார்.

காலித் ஜமில் புதிய திறமைசாலிகளை கண்டறிவதில் வல்லவராக அறியப்படுகிறார். ஒழுக்கமான, கடினமாக உழைக்கும் அணியை உருவாக்கி வருகிறார்.

டூரண்ட் கோப்பையில் அசத்திய பெஞ்சமினை தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோல், அசிஸ்டென எதுவுமே செய்யாவில்லை, ஐஎஸ்எல் தொடரிலும் விளையாடவில்லை. இருப்பினும் பெஞ்சமினின் ஆட்ட நுணுக்கத்தைப் பார்த்த காலித் ஜமில் அவரைத் தேர்வு செய்துள்ளார்.

சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் போட்டிகளில் இந்திய அணி ஆக்.29-இல் கஜகஸ்தானையும் ஈரான், ஆப்கானிஸ்தானை செப்.1, செப்.4ஆம் தேதிகளில் எதிர்கொள்கிறது.

The announcement of Khalid Jamil’s first squad as head coach of the Indian men’s national football team has generated immense discussion but no name has sparked more intrigue than Sunil Benchamin.

ஆந்திரத்தில் குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூல் மாவட்டத்தில், குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி மற்றும் 5 சிறுவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ணூல் மாவட்டத்தின், சிகேலி கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்த 10 மு... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவி... மேலும் பார்க்க

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்றிய மத்திய அரசு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்... மேலும் பார்க்க

பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், முதல்வர்க... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

காஷ்மீரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வன்முறைகள் தண்டனையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறை... மேலும் பார்க்க