செய்திகள் :

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

post image

காஷ்மீரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வன்முறைகள் தண்டனையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கான உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டங்கள் குறித்து ஐநா அவையில் விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின்போது பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, காஷ்மீரில் உள்ள சமூகங்களை தண்டிப்பதற்கும், அவர்களை அவமானப்படுத்துவதற்கும் அவர்கள் மீதான பாலியல் வன்முறை நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்தியா மீது குற்றம் சாட்டியது.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலளிக்கையில், 1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்களுக்கு எதிராக கடுமையான பாலியல் வன்முறை போன்ற கொடூரமான குற்றங்களை அந்நாட்டு ராணுவம் செய்திருப்பது வெட்கக்கேடான வரலாறு.

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்களில் பெண்கள், சிறுமிகள் இன்றளவிலும் கடத்தல், கட்டாயத் திருமணம், மத மாற்றத்தை எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான இந்தக் குற்றங்கள், அந்நாட்டின் நீதித்துறையும் உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்தக் குற்றங்களில் ஈடுபவர்கள்தான், தற்போது நீதிமான்களாகவும் மாறுவேடமிட்டிருப்பது முரண்பாடாக இருக்கிறது.

2024 அறிக்கையின்படி, கடந்தாண்டு பாகிஸ்தானில் 24,000-க்கும் மேற்பட்ட கடத்தல்கள், 5,000 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 500 ஆணவக் கொலைகளும் பதிவாகியுள்ளன. சிந்து பகுதியில் பாதிக்கப்பட்ட ஹிந்து சிறுமிகள் பலரும் திருமணம் மற்றும் மத மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும், தண்டனை விகிதம் 2 சதவிகிதத்துக்கும் குறைவானதாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

At UN, India Blasts Pakistan Over Sexual Violence In Conflict

ஆந்திரத்தில் குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்ணூல் மாவட்டத்தில், குளத்தில் மூழ்கி ஒரு சிறுமி மற்றும் 5 சிறுவர்கள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ணூல் மாவட்டத்தின், சிகேலி கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்த 10 மு... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவி... மேலும் பார்க்க

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்றிய மத்திய அரசு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்... மேலும் பார்க்க

பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், முதல்வர்க... மேலும் பார்க்க

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்... மேலும் பார்க்க