செய்திகள் :

அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்கிறார்.

அமிதாப்பச்சன் கூலி (இந்தி) படத்தில் நடத்தபோது விபத்துக்குள்ளார். அந்த அனுபவத்தை கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார்.

அவர்,'' கூலி படத்தில் ஏற்பட்ட விபத்தால் உயிர் பிழைத்தது ஆச்சரியமான விஷயம். விபத்து ஏற்பட்ட போது அறுவை சிகிச்சைக்கு அதிகப்படியான ரத்தம் தேவைப்பட்டது. 200 பேர் எனக்காக ரத்ததானம் கொடுத்தனர்." என்றார்

அமிதாப் பச்சன் புகைப்படம்

மஞ்சள் காமாலை

மேலும் அவர், "ஆனால் அவர்கள் கொடுத்த ரத்தத்தில் ஒன்றில் மஞ்சள் காமாலை வைரஸ் தொற்று இருந்துள்ளது. அந்த நேரத்தில் அந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை. உடம்புக்குள் இருந்த அந்த வைரஸ் தொடர்ந்து எனது கல்லீரலை சேதப்படுத்திக்கொண்டிருந்தது. 2005ம் ஆண்டு வழக்கமான உடல் சோதனையின் போதுதான் எனது 75 சதவீத கல்லீரல் அந்த வைரஸ் சேதம் செய்து இருந்தது தெரிய வந்தது. இப்போது நான் வெறும் 25 சதவீத கல்லீரலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உடல் சோதனை செய்துகொள்வது மிகவும் அவசியம். இது போன்ற நோய்களை கவனிக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது." என்றார்

காசநோய்

"2000 ஆம் ஆண்டில், எனக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது, கிட்டத்தட்ட ஒரு வருடம் மிகவும் கடுமையான சிகிச்சை அளிக்கப்பட்டது. கோன்பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியைத் தொடங்கப் போகும் நாளில் எனக்கு காசநோய் ஏற்பட்டது. அது முதுகெலும்பின் காசநோய். இது மிகவும் சங்கடமாக இருக்கிறது. உட்காரவோ அல்லது படுக்கவோ முடியாது. பெரும்பாலான நேரங்களில், நான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது ஒரு நாளைக்கு 8-10 வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். ”என்று தெரிவித்தார்.

பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்

மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது. சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவ... மேலும் பார்க்க

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க

Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால் மாந... மேலும் பார்க்க

Uttar Pradesh: `இரு முறை கடித்தால் முகாம்களில் அடைப்பு' - தெருநாய் பிரச்னைக்கு புதிய நெறிமுறைகள்

தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத... மேலும் பார்க்க

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக... மேலும் பார்க்க

குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்ன?

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள "டிங் டிங்" என்ற இரண்டு வய... மேலும் பார்க்க