செய்திகள் :

அமெரிக்காவின் அவமதிப்பை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள்! புதின்

post image

அமெரிக்காவின் அவமதிப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புதின், இந்தியா - ரஷியா இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார்.

இந்தியா - ரஷியா உறவு குறித்து அவர் பேசியதாவது:

“இந்திய மக்கள் எங்களின் உறவை மறந்துவிட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் ஒரு சிறப்பு கூட்டாண்மையை அறிவித்தோம், அது எங்களின் உறவுக்கு மிகச் சிறந்த விளக்கமாகும். பிரதமர் மோடி ஒரு மிகவும் புத்திசாலியான தலைவர், அவர் முதலில் தனது நாட்டைப் பற்றி சிந்திப்பவர்.” எனத் தெரிவித்தார்.

ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி குறித்து புதின் பேசியதாவது:

”இதில் அரசியல் எதுவும் கிடையாது. முற்றிலும் பொருளாதார கணக்கீடு. இந்தியா எங்கள் எரிசக்தி வளங்களை கைவிடுமா? அப்படி கைவிட்டால் இழப்புகள் ஏற்படும். சுமார் 9-10 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இழப்பு ஏற்படலாம். ஆனால், கொள்முதலை கைவிடாவிட்டால், அமெரிக்க வரியால் ஏற்படும் இழப்பும் அதே அளவில் இருக்கும்.

இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள், அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள், யாருக்கு முன்பாகவும் எந்த அவமானத்தையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் அழுத்தங்கள் காரணமாக எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டிரம்ப் பேசும்போது, ”ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியாவும் சீனாவும் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நிதி அளிப்பவர்களாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தாண்டு இறுதியில் ரஷிய அதிபர் புதின், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

Putin's views on India-Russia relations

இதையும் படிக்க : காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

மியான்மரில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம்!

மியான்மரில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மைய அறிக்கையின்படி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 09.54 மணிக்கு நிலநடுக... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 72 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் விசயாஸ் தீவுக்கூட்டம், செபு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டான்பாண்டயான் நகர கிழக்கு கடற்கரையிலிருந... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 ம... மேலும் பார்க்க

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த ... மேலும் பார்க்க

எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா். புனித மரியத்தை கொண்டாடும் ஆண்டு விழாவுக்காக அங்கு ஏராளமான வழிபாட்டாளா்க... மேலும் பார்க்க

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திகுத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.... மேலும் பார்க்க